என்ன சமாச்சாரம்…?? எண்ணெ(ய்) சமாச்சாரம்…..!! – பகுதி – 3

முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கட்டுரையின் முடிவில்.

இரும்பு செக்குல உரலும் , கல்லும் இரும்பால செஞ்சிருக்கும். நல்லா வேகமாவே சுத்தும். ஒரு நிமிசத்துக்கு 30 லிருந்து 36 சுற்று சாதாரணமா சுத்தும். பாரம்பரிய செக்குகளை விட சுமார் 4 மடங்கு உற்பத்தி அதிகமாகவே இருக்கும். (பாரம்பரிய செக்குகள் நிமிடத்துக்கு 9 ல இருந்து 12 சுற்று தான் சுத்தும்). இந்த இரும்பு செக்குகள் விதைகளை நசுக்காது; அரைக்கும். இரும்பு செக்கு ஓட்ட ஆரம்பிச்சு, ஒரு அரை மணி நேரத்துலயே எண்ணெய் எடுத்தரலாம். என்ன ஒன்னு எண்ணெய் நல்லா சூடாகிறும். டின்ல பிடிச்ச எண்ணெயயை கொஞ்சம் ஆர வைச்சு தான் தூக்க முடியும். புண்ணாக்கை வெறும் கைல அள்ள முடியாது அவ்ளோ சூடா இருக்கும். ஒரு சாக்கை வச்சுதான் புண்ணாக்கை அள்ளுவாங்க. இந்த சூட்டுல எண்ணெய்ல உள்ள பல நுண்சத்துக்கள் ஸ்வாஹா ஆகிறும் (காணாம போயிறும்). வர்ர எண்ணெய் உங்களுக்காக ஏற்கனவே சூடு பண்ணி லேசா சமைச்சிருக்கும் … அவ்ளோ தான்..!!

சில செக்கு ஓட்டுறவுங்க கருப்பட்டிக்கு பதிலா செல்லமா ’பாணி’ ன்னு சொல்ற மொலாஸ்ஸஸ் போடுவாங்க. அதென்ன மொலாஸ்ஸஸ் .?? சர்க்கரை ஆலை கழிவுதாங்க மொலாஸ்ஸஸ். பச்சையா இருக்குற கரும்புச்சாரை வெள்ளையா, மணல் மாதிரி ஒன்னோடொன்னு ஒட்டாம, ஒரு வாசமும் இல்லாம, சீனியா மாத்துனதுல வர்ர கழிவு பொருள். சீனி செய்ய எவ்ளோ இரசாயனங்கள் பயன் படுத்துனாங்களோ, அவ்ளோ இரசாயனத்தோட நச்சுத்தன்மையும் அதுல அடங்கி இருக்கும்ங்க. வெல்லப் பாகு மாதிரி பிசுபிசுன்னு இருக்கும். நல்லா புளிச்ச வாடை வரும். கருப்பட்டிக்கு பதிலா இதைப் போட்டாலே எண்ணெய் எடுத்துறலாம், விலையும் ரொம்ப மலிவு.

இந்த மொலாஸ்ஸஸோட இன்னொரு முக்கியமான பயன்..ஆமாங்க பயன் என்னன்னா.. சாராயம் செய்யுறதுக்கு இது தாங்க மூலப்பொருள். வெளிநாட்டுலயும் குடிகாரங்க இருக்காங்க நம்மூர்ல சாகுற மாதிரி நிறைய குடிச்சு சாகுறவுங்க அங்க ரொம்ப கம்மி. ஏன்னா இந்தியாவுல தயாரிக்குற சாராயம் மொத்தமும் (ஒரு சிலதை தவிற), இந்த மொலாஸ்ஸஸ்ல தாங்க செய்ய்யுறாங்க..அவ்ளோ இரசாயன விஷம் இருக்குங்க அதுல. இன்னொன்னு கேட்டுக்கோங்க. வெள்ளை சீனி தயாரிக்குறதே சாராயத்துக்காகத்தானாம்!! வெள்ளை சீனியும் அதுல செஞ்ச பண்டங்களையும் உங்க உடம்புக்குள்ளயோ உங்க குழந்தைங்க உடம்புக்குள்ளயோ அனுப்புறதா வேண்டாமான்னு நீங்க தாங்க ஆராய்ஞ்சு முடிவு பண்ணிக்கணும்.

அடுத்தது எக்ஸ்பெல்லர். எக்ஸ்பெல்லர்ல ஒரு நாள்ல சும்மா 1000 கிலோவிலிருந்து 1.50 லட்சம் கிலோ விதையை கூட எண்ணெய் ஆக்கிறலாம். இதுல எண்ணெய ரொம்ப சீக்கிரம் எடுக்குரதுக்காக முதல்ல விதைகளை எல்லாம் மேல் தோல் நீங்குற அளவுக்கு நல்லா அரச்சிறுவாங்க. அப்புறம் தண்ணீரை ஆவியாக்கி அரைச்ச விதைகளை ஆவியில லேசா வேக வைப்பாங்க. அப்புறம் நல்ல அழுத்தி பிழிஞ்சா எண்ணெய் வந்துரும். ஆனா இந்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்குறதால எண்ணெய் 100 – 200 டிகிரி செல்சியஸ் வரைக்குமே சூடாகிறும். இதனால இந்த எண்ணெய்ல இருக்குற முக்கியமான நுண்சத்துக்கள் எல்லாம் அழிஞ்சு போயிறும். நல்லா தண்ணி மாதிரி லேசா இருக்கும் எண்ணெய். எக்ஸ்பெல்லெர் எண்ணெய்ங்குறது ஏற்கனவே சமைச்ச எண்ணெய்க்கு சமம்ங்க!!

சமையலுக்கு பயன்படுத்துற மிளகு, சீரகம் அது இதுன்னு எதையெடுத்தாலும், தனித்தனியா இருக்கும் போது வாசம் கம்மியாதாங்க இருக்கும். ஆனால், சமைக்கும் போது சூட்டுல வாசம் கமகமக்கும் இல்லீயா? அதே மாதிரி தாங்க பாரம்பரிய செக்கு எண்ணெயும். ரொம்ப சூடு ஆகாததனால, நல்லா அடர்த்தியா இருக்குறதோட, மணமும் கம்மியாதாங்க வரும். ஆனா, சமைக்கும் போது, சூடேறும் போது தான் அற்புதமா மணம் வீசும். சமைக்கப்படாம உயிரோட இருக்கேன்னு நிரூபிக்க பொங்கிப் பொங்கி வரும்ங்க!!

********************************
முந்தைய பகுதிகளின் இணைப்புகள் :
பகுதி 1 – Facebook  WordPress
பகுதி 2 – Facebook WordPress 
மேலும் உடல்நலம் சார்ந்த பதிவுகளுக்கும், இத்தொடரின் அடுத்த பதிவுகளுக்கும், எங்கள் Sugham முகநூல் பக்கத்தை தொடரவும்!!
பயனுள்ள பதிவை உங்கள் நட்பு வட்டத்திற்கும் பகிருங்கள்!!
***************************************

என்ன சமாச்சாரம்…?? எண்ணெ(ய்) சமாச்சாரம்…..!! – பகுதி – 2

சென்ற பகுதியில நம்ம முன்னோர்கள்லாம் எப்படி எண்ணெய் எடுத்தாங்கன்னு பார்த்தோம் (அதை இங்க வாசிக்கலாம்https://goo.gl/DZuPhj  https://goo.gl/Hv8y3s )

எப்படி நவீன முறைகள்ல எண்ணெய் எடுக்குறாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி, உலகம் நவீனத்துக்கு மாறிட்டே இருந்ததுல, மக்கள் மனநிலையிலயும், சமூகத்திலேயும் என்னென்ன மாற்றங்கள் வந்துச்சுன்னும் மேலோட்டமா தெரிஞ்சுக்குவோம். இது உணவு வியாபாரத்தை பற்றி ஆழமா தெரிஞ்சுக்க உதவும்.

விவசாயத்துல நவீனம்ங்குற பேர்ல சில அதி மேதாவிகள் இரசாயனங்களையும், அவுங்க குடுக்குற வீரிய விதைகளையும் வச்சு தான் விவசாயம் பண்ண முடியும்னு நம்ப வச்சு, இரசாயனங்களையும், உயிர்  கொல்லிகளான பூச்சி கொல்லிகளையும், களை கொல்லிகளையும், வீரிய விதைகளையும் வித்துக்கிட்டே இருந்தாங்க.  இதில் சமீப வருகை தான் மரபணு மாற்று விதைகள்.  இந்த இரசாயணங்கள்லாம் ஸ்டிராய்ட்ஸ்ன்னு சொல்லப்படுற ஊக்க மருந்து மாதிரி தாங்க. உடனடியா பலன் தெரியும், ஆனா நாள்பட நாள்பட எதிர்மறையா செயல்படும்.

உயிரை கொடுத்தாலும் விதைகளை பத்திரமா பாதுகாத்த சமுதாயம்,  விதைகளுக்கும், நாற்றுகளுக்கும் ஏதோ விதை நிறுவனத்தை நம்பும் அவல நிலைக்கு வந்துட்டோம்.

விவசாயம் குறுகிட்டே வந்துச்சு. விவசாயம் பார்த்தாலே நட்டம்ங்குற நிலைமை பலபேருக்கு வந்துச்சு. .விவசாயிகள் வேலை தேடி பக்கத்துல இல்ல தூரமா இருக்குற டவுணுக்கோ, நகரத்துக்கோ கூலி வேலைக்கு போயி, அவுங்க கொழந்தைங்கள எல்லாம் நல்ல இங்கிலீஸு பள்ளிக்கூடத்துல படிக்க வச்சு எப்படியாவது ஒரு குமாஸ்தாவாகவோ, சூப்பர்வைசராகவோ, மேனேஜராவோ, எஞ்சினீயராவோ, ஒரு நவீன வைத்தியராவோ ஆக்கிரனும்னு முடிவு பண்ணிட்டாங்க.

பொருளாதாரத் துறையில் என்னாச்சுன்னா, அரசாங்கங்கள்லாம் கரன்சி அச்சடிக்குரதுக்கு அந்த நாட்டோட தங்க இருப்புக்கேத்தாப்ல (Gold Standard) அச்சடிக்குறத நிறுத்திட்டு, இஷ்டத்துக்கு அச்சடிக்க ஆரம்பிச்சிடாங்க. அதனால பணப் புழக்கம் அதிகமாகி பணத்தோட மதிப்பு குறஞ்சுட்டே வந்துச்சு. அதாவது இந்த வருஷம் 100 ரூபாய்க்கு என்ன வாங்குறீங்களோ, அடுத்த வருஷம் அதே பொருட்களை வாங்கணும்னா 100 ரூபா இருந்தா பத்தாது…இன்னும் அதிகம் வேணும். இப்படி பணத்தோட மதிப்பு வேகமா குறைய குறைய அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையா கூட ஆரம்பிச்சுச்சு. *உறுப்படியா ஒன்னும் பண்ணாம அடுத்தவன் உழைப்பை திருடுற வட்டித் தொழில், அதாங்க வங்கிகள், நல்லா வளந்துச்சு.* சும்மா பாருங்க உங்களை சுத்தி எத்தனை வங்கிகள் , எத்தனை கிளைகள்னு..?. இஷ்டத்துக்கு கடன் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, கடனுக்கு அடமானமா அசல் பணமான தங்கத்தையும், நிலத்தையும், அரசாங்க பத்திரங்களை மட்டும் தான் ஏத்துக்குவாங்க.

சீக்கிரம் கெட்டு போகுற விளைபொருட்கள் பயிர் செஞ்சவுங்க கடன் வாங்குனா தொலைஞ்சாங்க. இவுங்க உழைப்பையும், விளைபொருட்களையும் என்ன விலைக்கு விக்கணும்னு இடைத்தரகர்களும், பெரும்பணக்காரர்களும் தான் முடிவு பண்ண ஆரம்பிச்சாங்க.

இன்னொரு பக்கம் விதவிதமான பொழுது போக்கு அம்சங்களும் அதைசார்ந்த விளம்பர யுக்திகளும் பெருகுச்சு. *மனுசனை உணர்ச்சிவசப்படுத்துனா போதும், எதையும் அடைஞ்சுறலாம்ங்குறது தான் அந்த யுத்தி – வியாபாரம், அரசியல்னு எல்லாத்துக்கும் இந்த யுக்தி பொருந்தும்*.   உதாரணத்துக்கு இந்தியால கிரிக்கெட் விளையாட்டுகளை நடத்துறது ஒரு தனியார் அமைப்பு. அவுங்க அணியில யார் விளையாடணும்னு தேர்ந்தெடுக்குறது எப்படின்னு யாருக்கும் தெரியாது. முழுக்க அரசியல். ஆனா, அவுங்க அணியில விளையாடுர பசங்க டி- ஷர்ட்டுல ’இந்தியா’ ன்னு பேர் மட்டும்  போட்டா போதும் – நம்ம தேசபக்திய காமிக்க லீவு போடுவோம், எவ்வளவு ரூவா டிக்கெட்னாலும் போய் விளையாட்டை பார்ப்போம், இந்த அணி ஜெயிச்சா, நம்ம காசை கரியாக்கி பட்டாசு கொளுத்துவோம். அதை சார்ந்து விதம் விதமா செலவு செய்வோம். உணர்ச்சிப்பெருக்குல நாம எல்லாம் தனித்தனியா கொஞ்சம் கொஞ்சமா செலவு செய்வோம்..அவுங்க மொத்தமா கோடிகோடியா சம்பாதிப்பாங்க. சூப்பர் டெக்னிக்ல..?? இந்த பொழுது போக்கு அம்சங்கள் மக்கள் மனசுல பெரும் மாற்றங்களை ஏற்படுத்துச்சு.  சினிமாக்காரங்க மாதிரி அழகா அலங்காரம் பண்ணி சுத்துற கூட்டம்னா தான் மரியாதை!!. சோப்பு, சீப்பு,  கண்ணாடி, தோல் பெல்டு, சூவு , விதவிதமா உடுப்புகள், நாத்த மருந்து அதாங்க செண்டு….ன்னு என்ன அலங்காரப் பொருட்கள் வித்தாலும் எம்புட்டு விலை சொன்னாலும், அதை விக்குறதுக்கு ஒரு சினிமாகாரரோ, கிரிக்கெட் ஆடுற சின்ன பையனோ போதும், நம்ம மக்கள் வாங்கிருவாங்க.

இதெல்லாத்தையும் விட ஒரு மிகப்பெரிய ஒரு விற்பனை யுக்தி ஒண்ணு இருக்குது….. ரீஃபைன்டு எண்ணெயை சந்தைப் படுத்துனது பற்றி  பார்க்கும் போது அதைப் பற்றி விலாவாரியா அலசுவோம்.

நம்ம மக்களோட இன்னொரு மனநிலையையும் நாம இங்க கவனிக்கனும்.. நம்ம ஒரு 200 வருசமா வெள்ளைகாரன்கிட்ட அடிமையா வேற இருந்துருக்கோம். அந்த அடிமை மனப்பாண்மை லேசுல போயிறுமா..? வேகுற வெயில்லயும் அவனை மாதிரியே டை போட்டு சுத்துவோம்ல.!!

எதுவுமே வெள்ளையா இருந்தா தான் வாங்குவோம்….அரிசி வெள்ளையா இருக்கணும், காய்கறி பளிச்சுன்னு சோப்பு போட்டு கழுவுன மாதிரி இருக்கணும், கட்டிக்குற பொண்ணோ மாப்பிள்ளையோ கூட வெள்ளையா தாங்க இருக்கணும். அதேபோல எண்ணெயும் பார்க்க அழகா இருக்கணும்…தெளிவா தண்ணி மாதிரி இருக்கணும். .ஊத்தி வச்சிருக்குற பாத்திரம் உள்ள அப்படியே தெரியனும்னு மக்கள்கிட்ட விதவிதமான எதிர்பார்ப்புகள்.

ஒரு பக்கம் உணவு உற்பத்தி குறைவு, இன்னொரு பக்கம் தொழில் மட்டுமே சார்ந்த நகரங்களின் வளர்ச்சியும் அதை சார்ந்த உணவு தேவைகளின் பெருக்கமும் நடந்தது. நகரங்களில் இருப்போர்க்கும் – இல்லாதோர்க்குமிடையே உள்ள இடைவெளியும் கூடிட்டே இருக்குது. மலிவா இருக்குறதை மட்டுமே வாங்க முடியும்ங்குற அளவுக்கு ஒரு பெருங்கூட்டம் எல்லா நகரங்களிலும் உருவாகுது. இப்படி எல்லாம் உலகம் மாறியிருக்கும் போது… மெதுவா செக்கை ஓட்டி, அதுக்கு கருப்பட்டி போட்டு, கூலியும் கொடுத்து, மாட்டையும் பராமரிச்சு,  ஒரு நாளைக்கு வெறும் 30 லிட்டர் எண்ணெய் எடுத்து, ஒரு விலையைச் சொன்னா இந்த ஜணம் எப்படி வாங்கும்..? திங்குறதுக்கா இவ்ளோ விலைன்னு கேக்காதா..?.   ஏனோ வெளித்தோற்றத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு கொடுக்க மறந்துட்டோம்ங்க….!!  அப்படி வேலை ஆட்களையும், எண்ணெய் எடுக்குற நேரத்தையும் குறைச்சு, எடுக்குற எண்ணெயோட அளவையும் கூட்டி , எண்ணெய் விலையை குறைக்க வந்ததுதாங்க இரும்பு செக்கு, எக்ஸ்பெல்லர், அதிநவீன சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் மற்றும் எண்ணெயில் கலப்படங்கள்!!

இவற்றைப் பற்றி அடுத்தடுத்த பகுதிகள்ல பார்க்கலாம்ங்க…